jump to navigation

மலேசிய தமிழர் வரலாறு ஆகஸ்ட் 28, 2006

Posted by chandransblog in தினமும் ஒரு தகவல்.
trackback

மலேசிய தமிழர் வரலாறு என்றதும், நான் ஏதோ பெரிதாக ஆராய்ச்சி கட்டுரை எழுதி விடப் போகிறேன் என்று விடாதீர்கள்

தமிழர்கள் மலேசியாவிற்கு பெருமளவில் வரத் தொடங்கியது, ஆங்கிலேயர்கள் இங்கு வரத் தொடங்கிய பிறகுதான். 1870-ம் ஆண்டிற்கு பிறகுதான் இது தொடங்கியது. அந்த எண்ணிகையையை கீழே பார்க்கவும்:

1870 – 60,000 பேர்
1901 – 120,000 பேர்
1947 – 600,000 பேர்
1957 – 850,00 பேர்

மேலே உள்ள எண்ணிக்கையில், 85% தமிழர்கள். இந்த தமிழர்கள் எங்கள் நாட்டின் வளர்ச்சியில் பெரும் – மிகப் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். இன்றைக்கும் எங்களுடைய பங்கு குறிப்பிடத் தக்கதே. ஆனாலும் இதனை இன்றைய ஆட்சியாளர்கள் மறந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

காட்டை அழித்து, ரப்பர், காப்பி தோட்டங்களாக மாற்றி, இந்த நாட்டை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியவர்கள் எங்கள் முன்னோர்.

நல்ல தலைமைத்துவம் இல்லாத ஒரே காரணத்தால், நல்லவர்களாக வாழ்ந்த அவர்களால், வல்ல்வர்களாக மாற முடியாமல் போய் விட்டது. ஆனாலும் வீ.தி. சம்பந்தன், கோ.சாரங்கபாணி போன்றவர்கள், தமிழர்களின் விடிவெள்ளியாக தோன்றி, நாங்களும் இந்த நாட்டில் இருக்கிறோம் என்பதனை உணர்த்தினர்.

இன்றைக்கு, தேர்தல் காலங்களில் மட்டும் மூன்றறவது முக்கிய இனமாக கருதப்படும் நாங்கள், மற்ற காலங்களில் மறக்கப் பட்டு, மறைக்கப் பட்டே வருகிறோம். ஆனாலும்,
வரலாறு எங்களை மறக்காது.

மலேசிய தமிழர்களின் எதிர்காலம் மகத்தானதாக இருக்கும்.

மறுமொழிகள்»

1. jeevan - செப்டம்பர் 1, 2006

interesting information. I am glad that I get to know the history of the Tamils in Malaysia in brief. Hope you’ll continue to write more.

jeevan


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.